தூசி தட்டப்பட்ட தலைவன் இருக்கிறான்: 19 வருடங்களுக்குப் பின் மீண்டும் கைகோர்த்த கமல்- ஏ.ஆர்.ரஹ்மான்

 

தூசி தட்டப்பட்ட தலைவன் இருக்கிறான்: 19 வருடங்களுக்குப் பின் மீண்டும் கைகோர்த்த கமல்- ஏ.ஆர்.ரஹ்மான்

 கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார்.

சென்னை: கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்களைத் தொடர்ந்து ‘தலைவன் இருக்கிறான்’  படத்தில் நடிக்கவுள்ளதாக  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியாகியது. ஆனால், விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு திட்டமிட்டபடி சபாஷ் நாயுடு படத்தை எடுக்க முடியவில்லை கிடப்பில் போடப்பட்டது. 

அதை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கமல் – ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 பட அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்குள் அரசியல் கட்சி, பிக்பாஸ் நிகழ்ச்சி என்று கமல் பிஸியானதால் படத்தின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தலைவன் இருக்கிறான் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஆம்… இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசனுடன் எடுத்த புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கமல்ஹாசனுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.  

arrahman

அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், ‘உங்கள் பங்களிப்புடன் எனது அணியை வலுப்படுத்தியதற்கு நன்றி. சில திட்டங்களை உருவாக்கும் போது நன்றாகவும், சரியானதாகவும் உணர முடியும். தலைவன் இருக்கிறான் அத்தகைய ஒன்றாகும். இதற்காக உங்கள் உற்சாகத்தின் நிலை மிகவும் அளப்பரியதாகும். அதை என் மற்ற குழுவினருக்கும் பரப்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுமட்டுமின்றி கமல் ஹாசன், ராஜ் கமல் புரொடக்ஷன் மற்றும் லைக்கா புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். ஆக மொத்தத்தில் இவரின் கைவசம் தற்போது நான்கு படங்கள் உள்ளன. அது சரி இப்படியே படம் பண்ணிட்டே இருந்த எப்போ தான் கட்சி வேலைய பார்ப்பாரு…