தூங்கி கொண்டிருந்த கணவன் மீது அம்மி கல்லை போட்ட மனைவி

 

தூங்கி கொண்டிருந்த கணவன் மீது அம்மி கல்லை போட்ட மனைவி

திருவள்ளூரில் தூங்கி கொண்டிருந்த கணவன் மீது அம்மி கல்லை போட்டு கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் தூங்கி கொண்டிருந்த கணவன் மீது அம்மி கல்லை போட்டு கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பட்டாபிராம் அடுத்த தண்டுரை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜி.இவரது மனைவி கௌரி.இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.இவர்கள்  இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2016 ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி இரவு வழக்கம் போல, ஏற்பட்ட தகராறுக்கு பின்பு, வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவன் ராஜி மீது அம்மி கல்லை போட்டு கொலை செய்து விட்டு கௌரி தலைமறைவானார்.மாமியார் கமலா கொடுத்த புகாரின் பேரில், கௌரியை பட்டாபிராம் காவல் துறையினர் கைது செய்தனர்.

murder

இந்த வழக்கு திருவள்ளூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீப்தி அறிவுநிதி, கணவனை அம்மி கல்லை தலையில் போட்டு கொலை செய்த மனைவி கௌரிக்கு  ஆயுள் தண்டனை விதித்தார். பிணையாக 5 ஆயிரம் அபராதமும் கட்டத் தவறினால் 4 மாதம் கூடுதல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.இதனையடுத்து கௌரி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.