தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடூரனுக்கு 5 ஆண்டுகள் சிறை

 

தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடூரனுக்கு 5 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்ட காவல் துறையினர் உதயகுமாரை போக்சா சட்டத்தில் கைது செய்தனர். இவரின் மீதான வழக்கு தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி உதயகுமார் என்பவர் தூங்கி கொண்டிருந்த  9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். உதயகுமார் மீது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

rape

அதனையடுத்து, தேனி மாவட்ட காவல் துறையினர் உதயகுமாரை போக்சா சட்டத்தில் கைது செய்தனர். இவரின் மீதான வழக்கு தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. உதயகுமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. 

judge

இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதயகுமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அபராத தொகையை செலுத்தாத பட்சத்தில், சிறை தண்டனை 5 ஆண்டிலிருந்து 7 ஆண்டாக நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.