தூங்கிக்கொண்டே பேருந்து ஓட்டிய ஓட்டுநர்! லாரியுடன் மோதியதால் விபரீதம்!

 

தூங்கிக்கொண்டே பேருந்து ஓட்டிய ஓட்டுநர்! லாரியுடன் மோதியதால் விபரீதம்!

சென்னை அருகே அரசு பேருந்து கண்டெய்னர் லாரியுடன் மோதியதில், பேருந்தின் நடத்துனர் உயிரிழந்தார். மேலும் 10 பயணிகள் படுகாயமடைந்தனர். 

சென்னை அருகே அரசு பேருந்து கண்டெய்னர் லாரியுடன் மோதியதில், பேருந்தின் நடத்துனர் உயிரிழந்தார். மேலும் 10 பயணிகள் படுகாயமடைந்தனர். 

நெல்லூரில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்து நேற்று இரவு 2.40 மணியளவில் கோரட்டூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்னை துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றி செல்லும் கண்டெய்னர் லாரியின் மீது மோதியது. அதில் பேருந்தில் நடத்துனர் வீரமுத்து (57) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Accident

பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 10 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்தின் முன் பகுதியில் விபத்து ஏற்பட்டதால் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நடத்துனர் மரண மடைந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக பேருந்து ஓட்டுநர் சில காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். காயமடைந்தவர்கள் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நடத்துனர் வீர முத்துவின் உடல் உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்க பட உள்ளது.