தூங்கிக்கொண்டிருந்த பெற்றோர் மீது அம்மிக்கல்லைப்போட்டு கொலை செய்த மகன்!

 

தூங்கிக்கொண்டிருந்த பெற்றோர் மீது அம்மிக்கல்லைப்போட்டு கொலை செய்த மகன்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் குப்பந்தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி . இவரது மனைவி மாங்கனி. இவர்களது 20 வயது மகன் ராம்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு ராம்குமார், அவரது தாய், தந்தையிடம் தனக்கு திருமணம் செய்துவைக்கும்படி கேட்டு தகராறு செய்துள்ளார். பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார், விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் ராம்குமாரை மீட்டு சாத்தனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் வீடு திரும்பினார். 

கொலை

இந்நிலையில் நேற்று இரவு ராம்குமார் தனது தாய் தந்தையுடன் ஒரே அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென நள்ளிரவில் எழுந்த ராம்குமார், வீட்டின் வெளியே இருந்த அம்மிக்கல்லை எடுத்து தாய் மற்றும் தந்தை மீது போட்டுக் கொலை செய்தார். பின்னர், வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தின் அளித்த புகாரின் பேரில் தப்பியோடிய ராம்குமாரை கைது செய்த சாத்தனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.