தூக்க மாத்திரை கொடுத்து தூக்கப்பட்ட என்.ஆர்.ஐ பெண்-‘முகப்புத்தக’ நண்பரின் மொள்ளமாரித்தனம் 

 

தூக்க மாத்திரை கொடுத்து தூக்கப்பட்ட என்.ஆர்.ஐ பெண்-‘முகப்புத்தக’ நண்பரின் மொள்ளமாரித்தனம் 

2019 அக்டோபர் 31 அன்று அந்த பெண் அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத்திற்கு வந்தபோது ,ரெட்டி அவரை  விமான நிலையத்தில் வரவேற்று தனது சகோதரியின் இல்லத்தில் தங்கவைத்தார்இரண்டு நாட்களுக்குப் பிறகு, ரெட்டி  அவரை  மதிய உணவுக்கு அழைத்து தனது மனைவி மற்றும் மருமகனை அறிமுகப்படுத்திய பின்னர் அவர் அவளுக்கு தூக்க மாத்திரைகள் கலந்த பானத்தை வழங்கினார்.

ஒரு என்.ஆர்.ஐ பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து , மிரட்டி  பணம் பறித்த ஒரு நபரை போலீசார் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர், கர்நாடகாவில் உள்ள பிதார் நகரைச் சேர்ந்த சஞ்சீவ ரெட்டி (48), அவரது குடும்பத்தினருடன் நிஜாம்பேட்டில் வசித்து வந்தார் . அவர் ஜூலை 2018 இல் பேஸ்புக்கில் ஒரு என்.ஆர்.ஐ  பெண்ணுடன் நட்பு கொண்டிருந்தார். 2019 அக்டோபர் 31 அன்று அந்த பெண் அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத்திற்கு வந்தபோது ,ரெட்டி அவரை  விமான நிலையத்தில் வரவேற்று தனது சகோதரியின் இல்லத்தில் தங்கவைத்தார்.

wemon

இரண்டு நாட்களுக்குப் பிறகு, ரெட்டி  அவரை  மதிய உணவுக்கு அழைத்து தனது மனைவி மற்றும் மருமகனை அறிமுகப்படுத்திய பின்னர் அவர் அவளுக்கு தூக்க மாத்திரைகள் கலந்த பானத்தை வழங்கினார். பிறகு அவர் மயங்கியதும் மூவரும் அவரை தூக்கிக்கொண்டு நிஜாம்பேட்டிலுள்ள தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர், அங்கு ரெட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தார்.

arrest

பிறகு அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அவரை  அச்சுறுத்தி, அப்பெண்ணிடம் ரெட்டி  30 பவுன்  தங்கம்,6000 அமெரிக்க டாலர், காசோலை புத்தகங்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தார்.அவரது துன்புறுத்தலால் சோர்ந்துபோன அந்தப் பெண் காவல்துறையினரை அணுகியதால்,சஞ்சீவ ரெட்டி,அவரது மனைவி காவேரி மற்றும் மருமகன் விஷால் ரெட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.