தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்கோ…. கடுங்கோபகாரரான கேப்டன்!!

 

தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்கோ…. கடுங்கோபகாரரான கேப்டன்!!

சட்டசபையிலேயே நாக்கை மடித்து, கோபத்தை வெளிப்படுத்தியவர் கேப்டன் விஜயகாந்த்

சட்டசபையிலேயே நாக்கை மடித்து, கோபத்தை வெளிப்படுத்தியவர் கேப்டன் விஜயகாந்த்

அரசியலில் நுழைந்த கேப்டன் முக்கிய எதிர்க்கட்சியாக வளர்ந்து நின்ற காலத்தில் அவருக்கு பல எதிர்ப்புகளும் கிளம்பின. விஜயகாந்த் அரசியல் தலைவர்களை திட்டுவதைவிட பத்திரிக்கையாளர்களை திட்டுவதே அதிகம். எப்பவும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தைரியமாக எதையாவது பேசுவதும் கோபத்தை காட்டுவது விஜயகாந்தின் நடவடிக்கை…. எந்த அளவுக்கு கோபத்தை செய்தியாளர்கள் மீது காட்டுகிறாரோ அந்த அளவு பாசத்தை கிராம மக்கள் மீது காட்டுவார். மக்களிடம் பாசத்தை காட்டிய கேப்டனையும், செய்தியாளார்களிடம் கோபத்தை காட்டிய ஆங்கிரி பேர்டையும் மக்கள் தற்போது மிஸ் செய்கின்றனர் என்றால் மிகையாகது. 

vijayakanth

ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பின்போது தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்க, தூ என்று பத்திரிக்கையாளர்களை திட்டியது பெரிய சர்ச்சையானது. அதன்பின் கேப்டன் கூறிய அந்த வார்த்தைகளே மீம்ஸ்களாவும், காமெடி வசனமாகவும் உருவெடுத்தது. 

சினிமாவிலும், அரசியலிலும் தொடர்ந்து ஜாம்பாவானாக ஜொலித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இவர் இன்று மீம் கிரியேட்டர்களின் ஜாம்பவான சரிந்தார். அதற்கு அவரது உடல்நிலையே காரணம்… தற்போது நாள் முழுக்க அமைதியை கடைப்பிடிக்கும் கேப்டனை பார்க்கும்போது மக்களை விட செய்தியாளர்களுக்கே வருத்தமாகவுள்ளது.