தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி:புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம்!

 

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி:புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம்!

இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள வனப்பகுதியில்  நேற்று முன்தினம் காதல் ஜோடி ஒன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.  இதுகுறித்து அப்பகுதி வழியாகச் சென்ற சிலர் போலீசுக்கு தகவல் கொடுக்க,  தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பெருந்துறை போலீசார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ttn

இதையடுத்து போலீசார் காதலர்கள் வந்த இருசக்கர வாகனத்தைச் சோதனையிட்ட போது தற்கொலை செய்துகொண்ட அப்பெண்ணின் பெயர் சுகன்யா என்பது தெரியவந்தது. அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காகத் தற்கொலை செய்து கொண்டனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தன்று காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.