துள்ளிக் குதிக்கும் அ.தி.மு.க… தள்ளி நின்று தவிக்கும் தி.மு.க..!

 

துள்ளிக் குதிக்கும் அ.தி.மு.க… தள்ளி நின்று தவிக்கும் தி.மு.க..!

இந்தப்பிரச்னை ஓய்ந்தால் மட்டுமே திமுக நாங்குநேரியில் துள்ளிக் குதிக்குமா? அல்லது தள்ளி நின்று வேடிக்கை பார்க்குமா என்பது தெரிய வரும்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட அந்த தொகுதியில் உள்ள அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அந்த தொகுதியில் உள்ளவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருந்து வருகிறார்கள். இதனால், நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அந்த தொகுதியில் உள்ளவர்களுக்கு கொடுக்காமல், பக்கத்தில் இருக்கும் தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கொடுக்க அதிமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. 

இதற்கும் பல கட்ட போட்டி இருந்து வந்தது. கடைசியில் இரண்டு பேரில் ஒருவருக்கு அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிமுகவில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. நெல்லைக்காரர் ஒருவருக்கும்,  திரைப்பட நட்சத்திர பேச்சாளருக்கும் இடையில் தான் அதிக போட்டி நிலவி வருகிறது. udhay

 விரைவில் அந்த தொகுதியில் யார் போட்டியிட போகிறார்கள் என்பதை அதிமுக தலைமை அறிவிக்க உள்ளது.  ஆனால் இங்கு திமுகவின் நிலை தான் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏற்கெனவே இங்கு கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நின்று போட்டியிட்ட தொகுதி. ஆனால் இம்முறை திமுக இந்தத் தொகுதியை கேட்கிறது. ஆனால், காங்கிரஸ் விட்டுக்கொடுக்க மறுக்கிறது. இந்தப்பிரச்னை ஓய்ந்தால் மட்டுமே திமுக நாங்குநேரியில் துள்ளிக் குதிக்குமா? அல்லது தள்ளி நின்று வேடிக்கை பார்க்குமா என்பது தெரிய வரும்.