துல்கர் சல்மான் படத்தில் உதவி இயக்குநராக அவதாரம் எடுத்த பிரபல நடிகை 

 

துல்கர் சல்மான் படத்தில் உதவி இயக்குநராக அவதாரம் எடுத்த பிரபல நடிகை 

நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து வரும் புதிய படத்தில் உதவி இயக்குநராக நடிகை அனுபமா பரமேஸ்வரன் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. 

சென்னை: நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து வரும் புதிய படத்தில் உதவி இயக்குநராக நடிகை அனுபமா பரமேஸ்வரன் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. 

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அப்படத்தையடுத்து தமிழில் தனுஷுடன் இணைந்து கொடி படத்தில் நடத்துத்திருந்தார். இவரது நடிப்பையும் தாண்டி இவரது ஹேர்ஸ்டைலுக்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றனர். 

இவர் தற்போது ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அமலாபால் கதாபாத்திரத்தில் நடத்துத்திருக்கும் திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இவர் நடிப்பது மட்டுமின்றி தற்போது உதவி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். மலையாளத்தில் நடிகர் துல்கர் சல்மான் அஷோகண்டே அத்யராத்ரி என்ற படத்தை தயாரித்து வருகிறார். ஷாம்ஸு ஸைபா இயக்கி வரும் இதில் அனுபமா உதவி இயக்குநராக பணியாற்றி வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் நடிகர் ஜேக்கப் கிரிகோரி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் மற்றும் அணு சித்தாரா என்று இரு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் துல்கர் சல்மான் ஒரு சிறிய வேடத்தில் நடிப்பாரா என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். 

Ashokante Adhyarathri