“துரோகிகளை சுட்டுக் கொல்வோம்…”  மத்திய அமைச்சர் முழக்கம்!

 

“துரோகிகளை சுட்டுக் கொல்வோம்…”  மத்திய அமைச்சர் முழக்கம்!

மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருப்பவர் அனுராக் தாகூர்.டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தற்போது தீவிரமாக இருக்கிறார். ரித்தாலா தொகுதியில் பிஜேபி வேட்பாளருக்காக ஓட்டுக்கேட்டு தேர்தல் பிரச்சார மேடையில் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசினார்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருப்பவர் அனுராக் தாகூர்.டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தற்போது தீவிரமாக இருக்கிறார். ரித்தாலா தொகுதியில் பிஜேபி வேட்பாளருக்காக ஓட்டுக்கேட்டு தேர்தல் பிரச்சார மேடையில் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசினார்.

anurag-thakur-01

ஷாகின் பாக்கில் சி.ஏ.ஏவுக்கு எதிராகப் போராடுபவர்களை கடுமையான வார்த்தைகளால் தாக்கிப் பேசினார். மேலும் போராட்டத்தின் போது தேசவிரோத முழக்கங்கள் எழுப்பப்படுவதாக குற்றம் சாட்டினார். இதை அடுத்து கூட்டத்தைப்பார்த்து ” தேசதுரோகிகளை சுட்டுக் கொல்லுவோம் ” என்று முழங்கினார்.உணர்ச்சி வசப்பட்டு இருந்த மக்களும் ” துப்பாக்கித் தோட்டாவால் கொல்லுவோம்’ என்று பதிலுக்கு கோஷமிட்டனர்.மேடையில் இருந்த கபில் மிஸ்ரா உட்பட்ட தலைவர்களும் எழுந்து நின்று அதே கொலைமிரட்டல் முழக்கத்தை தொடர்ந்தனர்.

இதனால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அனுராக் தாகூர் கூட்டத்தைப் பார்த்து, இந்துத்துவா தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் காதில் விழும் அளவுக்கு ஓங்கிக் கோஷமிடுங்கள் என்றார்.இப்படி வெகு நேரம் ஒலித்துக்கொண்டு இருந்த இந்த கொலைமிரட்டலால் டெல்லித் தேர்தல் களத்தில் பரபரப்புக் கூடி  இருக்கிறது. 

 

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கீர்த்தி ஆசாத் கூறும்போது “இதுபோன்ற அமைதி,மற்றும் நல்லுறவைச் சீர்குலைக்கும் தலைவர்கள்தான் உண்மையான தேசத் துரோகிகள்” என்றார். மேடை ஏறினாலே கொல்லுவோம், தூக்கில் போடுவோம் என்று பேசும் பிஜேபியை டெல்லி மக்கள் தூக்கிப் போடுவார்களா என்பது ஃபிப்ரவரி 11-ம் தேதி தெரிந்துவிடும்.