துருக்கி தாக்குதல் – சிரிய அரசுப் படையினர் 9 பேர் உயிரிழப்பு

 

துருக்கி தாக்குதல் – சிரிய அரசுப் படையினர் 9 பேர் உயிரிழப்பு

துருக்கிப் படைகள் நடத்திய தாக்குதலில் சிரிய அரசுப் படையை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.

டமாஸ்கஸ்: துருக்கிப் படைகள் நடத்திய தாக்குதலில் சிரிய அரசுப் படையை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த நாட்டின் வடக்கு பகுதிகளை தற்போது சிரிய அரசுகள் தங்கள் வசம் கைப்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சிரியாவின் இட்லிப் மாகாணம் நைரோப் மற்றும் நய்ரப் பகுதிகளில் இன்று துருக்கி படைகள் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சிரிய அரசுப் படையை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையில் சிரிய அரசுப் படையினருக்கும் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று நடைபெற்ற மோதலில் 94 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.