துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர்: பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்!

 

துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர்: பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற  இடத்தில் நேர்ந்த கொடூரம்!

இளம்பெண் ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகத் தனது நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளார்

புதுடெல்லி:  துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

abuse

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகத் தனது நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே அவரின் நண்பர்கள் சிலர் இருந்துள்ளனர். இதில் சவான்  என்ற இளைஞர் அந்த பெண்ணை துப்பாக்கியை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

crime

இந்நிலையில் இது குறித்து ராஜ் பார்க் காவல்நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சவானை  கைது செய்தனர். மேலும் குற்றச்செயலில் ஈடுபட்ட  மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். 

harassment

முன்னதாக ஜெய்ப்பூரில் பொம்மை துப்பாக்கியை காட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் டாக்சி டிரைவர் ஒருவர் கைதானது குறிப்பிடத்தக்கது.