துப்பாக்கி சுடுதல் போட்டி : அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித்! 

 

துப்பாக்கி சுடுதல் போட்டி : அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித்! 

தல அஜித் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். 

துப்பாக்கி சுடுதல் போட்டி : அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித்! 

சென்னை: தல அஜித் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். 

தல அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறையிலும் மிகவும் சிறந்து விளங்கி வருகிறார். சமீபத்தில் இவர் தக்ஷா எனும் மாணவர் குழுவுடன் சேர்ந்து சிறிய அளவிலான ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாகச் செயல் பட்டு 
இரண்டாம் இடத்தை தட்டி சென்று சாதனை படைத்தது. 

 இவர் தற்போது தனது கவனத்தைத் துப்பாக்கி சுடுதல் பக்கம் திருப்பியுள்ளார். இந்த நிலையில் கடந்த 27ம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் சார்பாகக் கோவை காவலர் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.  அதில் 10 மீட்டர் பிரிவில் சென்னை ரைபில் கிளப் சார்பாக நடிகர் அஜித் பங்கேற்றார். 

அதில் 400 புள்ளிகளுக்கு 314 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்குத் தல அஜித் முன்னேறியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.