துப்பாக்கியுடன் டிக் டோக் வீடியோ எடுத்த விபரீதம்: வேடிக்கை பார்த்த இளைஞர் பரிதாப பலி!?

 

துப்பாக்கியுடன் டிக் டோக் வீடியோ எடுத்த விபரீதம்: வேடிக்கை பார்த்த இளைஞர் பரிதாப பலி!?

டிக் டோக்  வீடியோ எடுக்கும்போது எதிர்ப்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா:  டிக் டோக்  வீடியோ எடுக்கும்போது எதிர்ப்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டிக் டோக்  மீதான மோகத்தால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அங்கேறி வருவது தொடர்கதையாகி வருகிறது.  அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயதான பிரதிக் வதேகர். இவர் அவரது உறவினர்கள் சன்னி பவர், நிதின் வதேகர் மற்றும் சிலருடன் சேர்ந்து உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளனர். இதையடுத்து  ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அப்போது டிக் டோக்  வீடியோ எடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். 

tik tok

இதைத் தொடர்ந்து  தங்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை வைத்து பிரதிக் வதேகரின் உறவினர் ஒருவர் போஸ் கொடுக்க மற்றொரு  நபர் ஒருவர் அவரை வீடியோ எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகத் துப்பாக்கி வெடித்துள்ளது. இதில் அங்கிருந்த  பிரதிக் மீது  துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் பிரதிக் அங்கேயே சரிந்து விழுந்தார்.

suicide

இதைக்கண்ட பிரதிக்கின் உறவினர்கள் பயந்து அங்கிருந்து ஓட முற்பட்டனர். அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதில் ஒருவர் மட்டும் அங்கிருந்து தப்பியுள்ளார், இதையடுத்து பிரதிக் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

arrest

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சன்னி பவார் மற்றும் நிதின் வதேகரை  கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.