துப்பாக்கியால் சுட்டு.. கத்தியை வைத்து மிரட்டுவது… பிடிபட்ட தனுஷ் ரசிகர்கள்! எச்சரித்து அனுப்பிய போலீசார்

 

துப்பாக்கியால் சுட்டு.. கத்தியை வைத்து மிரட்டுவது… பிடிபட்ட தனுஷ் ரசிகர்கள்! எச்சரித்து அனுப்பிய போலீசார்

இளைஞர்கள் நான்கு பேர் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு, துப்பாக்கியால் சுடுவது, கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டல் விடுப்பது, இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்வது போல, கெத்து காட்டி எடுக்கப்பட்ட வீடியோ கடந்த 5 ம் தேதியன்று டிக் டாக் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், அந்த வீடியோவில் இருக்கும் 3 பேரும் ராசிபுரம் கல்லூரி மாணவர்களான ஸ்டான்லி, அஜித், நம்பிராஜ் என்றும் மற்றொருவர் கஞ்ச வியாபாரி சுடலை மணி என்றும் கண்டறிந்தனர்.

இளைஞர்கள் நான்கு பேர் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு, துப்பாக்கியால் சுடுவது, கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டல் விடுப்பது, இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்வது போல, கெத்து காட்டி எடுக்கப்பட்ட வீடியோ கடந்த 5 ம் தேதியன்று டிக் டாக் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், அந்த வீடியோவில் இருக்கும் 3 பேரும் ராசிபுரம் கல்லூரி மாணவர்களான ஸ்டான்லி, அஜித், நம்பிராஜ் என்றும் மற்றொருவர் கஞ்ச வியாபாரி சுடலை மணி என்றும் கண்டறிந்தனர். 

dhanush fans

இதையடுத்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.  தாங்கள் நடிகர் தனுஷின் ரசிகர்கள் என்றும், கடந்த 2 மாதங்களுக்கு முன் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். 
பிடிபட்ட 3 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்களை அறிவுரை கூறி எச்சரிக்கை செய்த போலீசார், பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர். மற்றொரு நபரான சுடலை மணி, கஞ்சா வியாபாரி என்பதால் அது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை எடுத்த நண்பரான பரத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.