துப்பட்டாவை கழுத்தில் கட்டிக்கொண்டு விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!
சிறுவன் உசேனின் கழுத்து இறுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளான்.
கோவை மாவட்டம் உக்கடம் ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாகத்துல்லா. இவரது இவரது மகன் காஜா உசேன். 9 வயதான காஜா உசேன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவன், தாயின் துப்பட்டாவை எடுத்து ஜன்னலில் ஒருமுனையை கட்டிவிட்டு மறுமுனையை கழுத்தில் காட்டியவாறு கட்டிலில் விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிலிலிருந்து கீழே தவறிவிழுந்துள்ளான். இதில் சிறுவன் உசேனின் கழுத்து இறுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளான்.
இதையடுத்து சிறுவன் பேச்சு மூச்சின்றி மயங்கி கிடப்பதை பார்த்த அவரின் பெற்றோர், உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உசேன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உக்கடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.