துபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்!

 

துபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்!

துபாய்: குவைத் அரசின் வரியில்லா லாட்டரியில் ரூ. 6.85 கோடியை இந்தியர் ஒருவர் வென்றுவிட்டார். சந்தீப் மேனன் என்ற இந்தியர் குவைத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அந்நாட்டின் லாட்டரியை பெற்றுள்ளார்.
இதில் அவருக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.6.85 கோடி) பரிசு விழுந்துள்ளது. இது மட்டுமல்லாது அவருக்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மோட்டார் பைக்கும் பரிசாக விழுந்துள்ளது. துபாய் அரசு லாட்டரி வரியில்லாத லாட்டரியாகும். இதனால் சந்தீப் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது போன்ற மிகப் பெரிய பரிசை நான் வென்றதே இல்லை என்றும் பேரதிர்ச்சியை கொடுத்த துபாய்க்கு நன்றி என்றும் சந்தீப் தெரிவித்துள்ளார். 1 மில்லயன் டாலர் பரிசை வென்ற 123-ஆவது இந்தியர் ஆவார். கடந்த 1999-ஆம் ஆண்டு லாட்டரி விற்பனை தொடங்கிய நாள் முதல் இந்த கணக்கெடுப்பு நடந்துள்ளது.