துபாயில் பேருந்து விபத்து: இதுவரை எட்டு இந்தியர்கள் உள்பட 17 பேர் பரிதாப பலி!

 

துபாயில் பேருந்து விபத்து:  இதுவரை எட்டு இந்தியர்கள் உள்பட 17 பேர் பரிதாப பலி!

துபாயில் நடந்த பேருந்து விபத்தில் இதுவரை எட்டு இந்தியர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

துபாய்:  துபாயில் நடந்த பேருந்து விபத்தில் இதுவரை எட்டு இந்தியர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

dubai

ஓமன் நாட்டில் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு,  31 பேர் துபாய் நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அல் ரஷிதியா என்ற இடத்தில் நேற்று மாலை 5.45 மணிக்கு வந்துகொண்டிருந்த பேருந்து நிலைதடுமாறி மெட்ரோ நிலையம் அருகே திடீரென விபத்திற்குள்ளானது. இதுகுறித்து அறிந்த அந்நாட்டு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் துரிதமாகச் செய்தனர். 

 

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த  கேரளாவைச் சேர்ந்த ராஜகோபாலன், பெரோஸ்கான் பதான், ரேஷ்மா பெரோஸ்கான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்காவீட்டில், கிரண் ஜானி, வாசுதேவ், திலக்ராம் ஜவஹர் தாகூர் ஆகிய 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். நான்கு  இந்தியர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இன்னும் மூவர் ரஷீத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை  ஐக்கிய அரபி அமீரக இந்தியத் தூதரகம்  உறுதி செய்துள்ளது. 

 

விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை, தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு, தேவையான உதவிகள் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.