துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு!

 

துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு!

மக்களின் நலன் கருதி அம்மா உணவகம் மட்டும் வழக்கம் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,800ஐ எட்டியுள்ள நிலையில்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் படி உணவு பொருட்கள், பெட்ரோல், இறைச்சி, மீன், ஏடிஎம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும், மக்களின் நலன் கருதி அம்மா உணவகம் மட்டும் வழக்கம் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ttn

அம்மா உணவகத்தின் தரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று, சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அதே போல, கலங்கரை விளக்கம் அருகே இருக்கும் அம்மா உணவகத்திலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து இன்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அங்கு வழங்கப்படும் உணவை உண்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தனர்.