துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோவையில் 5 நாள் சிகிச்சை

 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோவையில் 5 நாள் சிகிச்சை

5 நாட்கள் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கோவைக்கு சென்றுள்ளார்.

கோவை: 5 நாட்கள் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கோவைக்கு சென்றுள்ளார். 

முதுகுவலியால் நீண்ட நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, ஏற்கனவே கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள கேரள ஆயுர் வைத்திய சாலையில் மூலிகை மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், தற்போது கணபதியில் உள்ள இயற்கை வழி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவைக்கு புறப்பட்டுச் சென்றார். 

அங்கு, 5 நாட்கள் தங்கி, ஓ.பி.எஸ் ஆயுர்வேத சிகிச்சை பெற இருப்பதாக அவரது பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.