துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

 

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி சென்னை மயிலாப்பூர் வரதராஜ புரத்தில் வசித்து வருகிறார்.

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி சென்னை மயிலாப்பூர் வரதராஜ புரத்தில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் எப்போதும் காவலுக்காக இருப்பர். நேற்று காவல் பணியில் ஆயுதப்படை போலீஸ் மணிகண்டன் இருந்துள்ளார். அதிகாலை 3 மணிக்கு, அங்கு பைக்கில் வந்த மூன்று பேர், குருமூர்த்தி வீட்டை நோக்கி பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர். அச்சமயம் அங்கிருந்த நாய், அவர்களை பார்த்துக் குரைத்துள்ளது. 

ttn

உடனே உஷார் ஆன காவலர் மணிகண்டன் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், அவர்கள் பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நாய் குரைத்ததால் அந்த நபர்கள் பெட்ரோல் குண்டு வீசவில்லை. இது குறித்து காவலர் மணிகண்டன்  மயிலாப்பூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.