தீவிர அரசியலை விட்டு ஒதுங்கிய நாஞ்சில் சம்பத்! அதிர்ச்சி கொடுத்த இளையதளபதி விஜய்!?

 

தீவிர அரசியலை விட்டு ஒதுங்கிய நாஞ்சில் சம்பத்! அதிர்ச்சி கொடுத்த இளையதளபதி விஜய்!?

ம.தி.மு.கவில் வைக்கோவின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி ,ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ம.தி.மு.கவில் வைக்கோவின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி ,ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பிறகு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் அணிக்கு வந்தார்.அங்கேயும் அவரால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை!

அவர் ஒவ்வொரு முறை கட்சி மாறும் போதும்,தனிப்பட்ட ஆதாயம் கிடைப்பதால்தான் இப்படி கட்சி மாறுகிறார் என்று மீம்ஸ்கள் வந்தாலும் அவர் எதற்கும் பெரிதாக ரியாக்ட் செய்வதில்லை.இப்படியான நிலையில்தான் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் படத்தில் நாஞ்சில் சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போதுதான் ,நாஞ்சில் சம்பத் பற்றி அதுவரை வெளியுலகம் அறியாத ஒரு தகவலைச் சொல்லி பரபரப்பை உண்டு பண்ணினார்.’இந்தப் படத்தில் நீங்க நடிக்கணும் சார் என்று கேட்டேன்.என் பிள்ளைக்கு காலேஜ் ஃபீஸ் காட்டுவீங்களான்னு கேட்டார். அவ்வளவு எளிமையான மனிதர்’ என்று அவர் சொன்னதற்கு செம ரியாக்சன் கிடைத்திருக்கிறது.

யெஸ்…இளையதளபதி விஜய் – அட்லீ கூட்டணி இணையும் ‘தளபதி 63’ படத்தில் ‘பிரமாதமான கேரக்டர் இருக்கு நீங்கதான் நடிக்கிறிங்க.சார் உங்ககிட்ட சொல்லச் சொன்னார் என்று விஜயின் மேனேஜர் அலை பேசியில் அழைத்து சொல்லியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் ரெடி! வெல்கம் சார்.