தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்த இஸ்லாமிய மதகுரு கைது!

 

தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்த இஸ்லாமிய மதகுரு கைது!

பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக்க விரும்பும் ‘காலிஸ்தான்’ என்கிற இயக்கத்தைச் சார்ந்த ஜர்னல் சிங் என்பவர் சமீபத்தில் பெங்களூரில் தங்கி இருந்தபடி ‘காலிஸ்தான்’ தீவிர வாதிகளுக்கு உதவியதாக கைதுசெய்யப் பட்டார்.இது போலவே பெங்களூரில் முகாமிட்டு இருந்த டெல்லிப் போலீசாரும் இருதினங்களுக்கு முன்னால் கேரளாவைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளைப் பெங்களூரில் கைதுசெய்தனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள்,மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் பெங்களூரு நகரிலும்,கர்நாடக மாநிலத்தின் உட் பிரதேசங்களிலும் பிடிபட்டு வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக்க விரும்பும் ‘காலிஸ்தான்’ என்கிற இயக்கத்தைச் சார்ந்த ஜர்னல் சிங் என்பவர் சமீபத்தில் பெங்களூரில் தங்கி இருந்தபடி ‘காலிஸ்தான்’ தீவிர வாதிகளுக்கு உதவியதாக கைதுசெய்யப் பட்டார்.இது போலவே பெங்களூரில் முகாமிட்டு இருந்த டெல்லிப் போலீசாரும் இருதினங்களுக்கு முன்னால் கேரளாவைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளைப் பெங்களூரில் கைதுசெய்தனர்.

arrested-009

இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்தத் தீவிரவாதிகளிடம் இருந்து பல திடுக்கிடும் செய்திகள் போலீசாருக்கு கிடைத்திருக்கின்றன.மேலும் மவுலான சதகத்துல்லா என்பவர் இந்தத் தீவிரவாதிகள் மறைந்து வாழ குண்டக்கல்லில் இருக்கும் ஒரு மசூதியை புகலிடமாகக் கொடுத்ததும் தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருக்கும் குண்டக்கல்லுக்கு வந்த போலீசார் அங்குள்ள மசூதியில் வைத்து மவுலான சதகத்துல்லாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது சதகத்துல்லாகான் தீவிரவாதிகளுக்கு உதவியிருப்பதும்,அவருடன்,  அல் உமர் அமைப்பை சேர்ந்த மெகபூப் பாஷா என்பவருக்கும் பங்கிருப்பதை உறுதி செய்த போலீசார் இருவரையிம் கைது செய்தனர்.தொடர்ந்து பெங்களூரில் இருவரையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.