தீவிரமடையும் கொரோனா… பஞ்சாப்பில் ஊரடங்கு மே 1 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

 

தீவிரமடையும் கொரோனா… பஞ்சாப்பில் ஊரடங்கு மே 1 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் ஒடிஷாவில் ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் ஒடிஷாவில் ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கவலை மக்கள் மத்தியில் உள்ள நிலையில், ஒடிஷா மாநிலம் அதிரடியாக ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. தெலங்கானா, ஹரியானா, மகாராஷ்டிரா என பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில் ஊரடங்கை மே 1 ஆம் தேதி வரை நீட்டித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது பஞ்சாப் அரசு.

ஊரடங்கு உத்தரவு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பஞ்சாபில் 101 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4 ஆகவும் உள்ளது.