தீர்ப்பு பின்னடைவு இல்லை; அனுபவம்: டிடிவி தினகரன்

 

தீர்ப்பு பின்னடைவு இல்லை; அனுபவம்: டிடிவி தினகரன்

உயர் நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை அனுபவம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை: உயர் நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை அனுபவம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் அதிரடி தீர்ப்பளித்தார். இதனால் டிடிவி தரப்பினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் அடுத்தக்கட்டமாக தினகரன் என்ன நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

இந்நிலையில் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அரசியலில் பின்னடைவு என்பது இல்லை இது ஒரு அனுபவம். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நினைத்தோம் ஆனால் எதிராக வந்துருக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 18 எம்.எல்.ஏக்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதைத்தான் செயல்படுத்துவோம். மேல்முறையீடு செய்யமாட்டோம் என நான் சொல்லவில்லை. இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். இந்த தீர்ப்பு அமமுகவினரிடையே மேலும் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்றார்.