தீர்ப்பு துரோகிகளுக்கு சரியான பாடம்: சி.வி.சண்முகம் அதிரடி

 

தீர்ப்பு துரோகிகளுக்கு சரியான பாடம்: சி.வி.சண்முகம் அதிரடி

உயர் நீதிமன்ற தீர்ப்பு துரோகிகளுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னை: உயர் நீதிமன்ற தீர்ப்பு துரோகிகளுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.

இதையடுத்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார். இது டிடிவி தரப்புக்கு ஏமாற்றத்தையும், ஈபிஎஸ் தரப்புக்கு உற்சாகத்தையும் அளித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வழக்கின் தீர்ப்பு துரோகிகளுக்கு சரியான பாடத்தை புகட்டி உள்ளது என்றார்.