தீயில் கருகி உயிரை கொடுத்து பயணிகளை காப்பாற்றிய விமான பணியாளர்கள்: நெகிழ வைக்கும் சம்பவம்?!

 

தீயில் கருகி உயிரை கொடுத்து பயணிகளை காப்பாற்றிய விமான பணியாளர்கள்: நெகிழ வைக்கும் சம்பவம்?!

ரஷ்ய விமான விபத்தில் பயணிகள் சிலரை காப்பாற்றிவிட்டு  விமானப் பணியாளர்கள்  சிலர் தங்கள் உயிரை விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய விமான விபத்தில் பயணிகள் சிலரை காப்பாற்றிவிட்டு  விமானப் பணியாளர்கள்  சிலர் தங்கள் உயிரை விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

maxim

73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் மாஸ்கோவில் இருந்து முர்மான்ஸ்க் பகுதிக்கு  சூப்பர் ஜெட் விமானம் ஒன்று வந்தது.  விமானம் புறப்பட்ட சில மணிநேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானத்தின் பின்புறத்தில் மளமளவென தீ பிடித்தது. இதனால் விமானத்தில் அவசர வழியாகக் குழந்தைகளும் பெண்களும் அலறியடித்துக் குதித்தனர். இதில் 2 குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  மின்னல் தாக்கியதால், விமானத்தின் தொடர்பு சாதனங்கள் செயலிழந்ததாகவும் அதேகாரணமாகவே விமானம் தரையிறக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

fight

இந்நிலையில் தீப்பிடித்த பகுதியிலிருந்த  விமானப் பணிப்பெண் தத்யானா கசட்கினா, விமான உதவியாளர் மாக்ஸிம் மொய்சீவ் ஆகியோர் தங்கள்  உயிரைக் கொடுத்து பயணிகளைக் காப்பாற்றியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. விமானத்தின் பின் பகுதியிலிருந்த உதவியாளர் மாக்சிம் தீ பரவியதும் கூச்சலிட்டு அனைவரையும் வெளியில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். தீயிலிருந்து பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் இறந்துள்ளார். அதே போல் விமான பணிப்பெண்  தத்யானா, தீ பரவுவதைப் பார்த்து பயணிகளை முன்பக்கமாக இழுத்துத் தள்ளியுள்ளார். அங்குள்ள சிலரைக் காப்பாற்றிய  அவர்  தீயில் கருகி பரிதாபமாகப் பலியாகியுள்ளார். பயணிகளின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் இறந்துள்ள   இவர்கள் இருவரது தியாகத்தைப் பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருவதோடு தங்கள் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.