தீப்பிடித்து எரிந்த ஓட்டுநர்… பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபரீதம்! 

 

தீப்பிடித்து எரிந்த ஓட்டுநர்… பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபரீதம்! 

சென்னை பூவிருந்தவல்லி அருகே பெட்ரோல் பங்க்கில் லாரிக்கு டீசல் நிரப்பிக் கொண்டிருந்தபோது அருகில் நின்ற ஓட்டுநர் மீது தீப்பிடித்த காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

சென்னை பூவிருந்தவல்லி அருகே பெட்ரோல் பங்க்கில் லாரிக்கு டீசல் நிரப்பிக் கொண்டிருந்தபோது அருகில் நின்ற ஓட்டுநர் மீது தீப்பிடித்த காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம், கேராய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்.  ஓட்டுநராக பணியாற்றிவரும் இவர், தனது லாரிக்கு டீசல் நிரப்புவதற்காக பூந்தமல்லி அடுத்த  செம்பரம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் லாரியை நிறுத்தியுள்ளார். அங்கு பணி புரியும் சுரேஷ், லாரியில் டீசலை நிரப்புவதற்கான பைப்பை போட்டுவிட்டு அதை பிடிக்கும்படி டிரைவர் ராஜேஷ்குமாரிடம் கூறிவிட்டு, பில் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக டீசல் டேங்க் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். அதற்குள் ராஜேஷ்குமாரின் உடலில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே அவர் அலறி அடித்தப்படி அங்குமிங்கும் ஓடினார். இந்த காட்சிகள் பெட்ரோல் பங்க்கில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

fire 

உடனே பெட்ரோல் நிலைய ஊழியர்கள், டிரைவரின் உடலில் எரிந்த தீயை தீ அணைக்கும் கருவி மூலம் அணைத்தனர். பின்னர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். முகம், மார்பு, தொடை பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருக்கும்போது செல்போன் பயன்படுத்தியதால் தீ பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.