“தீபிகா மன்னிப்பு கேட்க வேண்டும்”- கங்கணம் கட்டும் கங்கனா ரனாவத் -சர்ச்சையான சபாக் டிக்டாக் வீடியோ
டிக்டோக் வீடியோவில் தீபிகா தனது ‘சபாக் பட தோற்றம் பற்றி விவாதித்ததால் சர்ச்சை கிளம்பியுள்ளது
சமீபத்தில் வெளியான சபாக் திரைப்படத்தின் விளம்பரங்களின் போது தீபிகா படுகோனே டிக்டாக்கில் தோன்றினார் . அதில் அவரது டிக்டாக் வீடியோக்கள் மில்லியன் கணக்கான views பெற்றன. அப்போது , அவரது வீடியோக்களில் ஒன்று ஒரு சர்ச்சையைத் தூண்டியது மற்றும் நெட்டிசன்கள் தீபிகாவை அவதூறாக பேசத் தொடங்கினர்.
டிக்டோக் வீடியோவில் தீபிகா தனது ‘சபாக் பட தோற்றம் பற்றி விவாதித்ததால் சர்ச்சை கிளம்பியுள்ளது
சமீபத்தில் வெளியான சபாக் திரைப்படத்தின் விளம்பரங்களின் போது தீபிகா படுகோனே டிக்டாக்கில் தோன்றினார் . அதில் அவரது டிக்டாக் வீடியோக்கள் மில்லியன் கணக்கான views பெற்றன. அப்போது, அவரது வீடியோக்களில் ஒன்று ஒரு சர்ச்சையைத் தூண்டியது மற்றும் நெட்டிசன்கள் தீபிகாவை அவதூறாக பேசத் தொடங்கினர்.
No @deepikapadukone.This promo isn’t cool or cute. It’s insensitive & ghastly.
The movie wasn’t about you & your make up. It was about a woman scarred for life.And victims like her,whose marks can’t be wiped off,unlike your make up.
You lost the plot,alas. https://t.co/9Zt8XEmSqI
— Smita Barooah (@smitabarooah) January 18, 2020
இந்த வீடியோவில் தீபிகா தனது ‘சபாக் படத்தின் தோற்றம்’ பற்றி விவாதித்திருந்தார் – வேறுவிதமாகக் கூறினால், அவரை ஆசிட் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவள் என்று சித்தரித்து புரோஸ்டெடிக் கொண்ட தோற்றம் என்று குறிப்பிட்டார் . வீடியோவில், தீபிகா தனக்கு விருப்பமான மூன்று தோற்றங்களை மீண்டும் உருவாக்க @faby_makeupartist என்ற பெயரில் உள்ள டிக்டாக் பயனாளிக்கு சவால் விடுகிறார். “எனக்கு மிகவும் பிடித்த மூன்று தோற்றங்களுடன் நான் ஃபேபியை சவால் விடுகிறேன்,” என்று நடிகை பயனரிடம் கூறுகிறார், பின்னர் தீபிகாவின் ஓம் சாந்தி ஓம், பிகு மற்றும் சபாக் தோற்றங்களை மீண்டும் உருவாக்குகிறார்.
பேபி விரைவாக மூன்று தோற்றங்களையும் தனக்குதானே உருவாக்குகிறார், பின்னணியில் ஒரு peppy இசையுடன் . இந்த மூன்று வேடங்களும் தன் இதயத்திற்கு நெருக்கமானவை என்பதை தீபிகா தெரிவிக்க முயன்றதுபோல் இருக்கிறது . இருப்பினும், இது நெட்டிசன்களுடன் சரியாக ஒத்து போகவில்லை.
ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய தனது சகோதரி ரங்கோலி சாண்டல் இந்த வீடியோவால் வருத்தப்பட்டதாக தீபிகாவின் இந்த வீடியோ பற்றி கங்கனா ரனாவத் கூறினார். அதனால் தீபிகா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறினார். எல்லோரும் தவறு செய்கிறார்கள், ஆனால் ஒரு மனிதனாக, தன்னை மீட்டுக்கொள்வது முக்கியம், என்று அவர் மேலும் கூறினார்.