தீபாவளி பண்டிகை: நாட்டு வெடி வெடித்ததில் மாணவர் பலி

 

தீபாவளி பண்டிகை: நாட்டு வெடி வெடித்ததில் மாணவர் பலி

தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு வெடி வெடித்ததில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

நாமக்கல்: தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு வெடி வெடித்ததில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கால நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனினும், நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக ஏராளமானோர் மீத போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், உரிமம் பெற்ற பட்டாசு கடைகளில் இருந்து மட்டுமே தரமான பட்டாசுகளை வாங்கி வெடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த வடுகபட்டியில் நாட்டு வெடி வெடித்ததில் 7-ஆம் வகுப்பு மாணவர் மணிவேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், படுகாயமடைந்த மாணவர்கள் சூர்யா, வசந்த் ஆகியோர் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.