தீபாவளி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

 

தீபாவளி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளை மற்றும் நாளை மறுநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையையன்று பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூட்டாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் கொண்டாடும் அன்பிற்கினிய மக்களுக்கு எங்களது உள்ளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எதிர்காலத்தில் அநீதி அழிந்து, நீதி தழைத்திட! மக்களுக்கு நல்வாழ்வு அமைய வேண்டுமென்று தேமுதிக சார்பில் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.