தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் வசூல் வேட்டை; சோதனையில் சிக்கியது ரூ.50 லட்சம்

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் வசூல் வேட்டை; சோதனையில் சிக்கியது ரூ.50 லட்சம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம், காவல் நிலையம், சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிக அளவு லஞ்சப் பணமும், பரிசுப் பொருட்கள் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசால் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சோதனைகளில் கணக்கில் வராத ரூ.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ரொக்கம், தங்கக் காசுகள், பட்டாசுகள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.