தீபாவளி சிறப்பு பேருந்துகள்: எந்தெந்த இடத்திலிருந்து இயக்கப்படும் என்று தெரிய வேண்டுமா?

 

தீபாவளி சிறப்பு பேருந்துகள்: எந்தெந்த இடத்திலிருந்து இயக்கப்படும் என்று தெரிய வேண்டுமா?

சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படும்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதனால் அவர்களுக்கு வசதியாக ஆண்டுதோறும் கூடுதல் பேருந்துகளைத் தமிழக போக்குவரத்துத் துறை  இயக்கி வருகிறது.

அதன்படி சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படும் எனவும், முன்பதிவு அடுத்த மாதம் 23ம் தேதி தொடங்குவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

bus

இந்நிலையில் சிறப்புப் பேருந்துகளின்  வழித்தடங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:

கோயம்பேடு:  மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ,திருச்சி, மதுரை ,திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் ,கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ,விழுப்புரம் ,பண்ருட்டி ,நெய்வேலி ,கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் ,மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள்

மாதவரம் : ஆந்திர மாநிலத்திற்குச்  செல்லும் அனைத்து பேருந்துகள்

koyambedu

பூவிருந்தவல்லி : ஆற்காடு ,ஆரணி, வேலூர், தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,திருப்பத்தூர் ,ஓசூர் மற்றும் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் சானடோரியம் : விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்

கே.கே நகர் : ஈசிஆர் வழியாகப் புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்