தீபாவளியை முன்னிட்டு நவ.5-ஆம் தேதி விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

 

தீபாவளியை முன்னிட்டு நவ.5-ஆம் தேதி விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5-ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5-ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் வருகின்ற நவம்பர் 6-ஆம் தேதியன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், நவம்பர் 5ம் தேதிக்கு பதிலாக நவ.10ம் தேதி பணிக்கு வரவேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.