தீபாவளியன்று தமிழகத்தில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

 

தீபாவளியன்று தமிழகத்தில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை முதல் நவ. 8-ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ. 8-ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை இந்த முறை தாமதமாக கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், ‘கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. நாளைத் தொடங்கி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.இது குமரிக்கடலை ஒட்டிய பகுதிகளைக் கடக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

‘இதனால் நாளை முதல் 8-ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை வலுப்பெறக்கூடும் .அக்காலகட்டத்தில் தென் தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும்.பருவமழை வலுப்பெறும் போது தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகளில் சீற்றம் மிகுந்து காணப்படும் என்றும், அந்தச் சமயத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்’ என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.