தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை வேண்டும்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை..!

 

தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை வேண்டும்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை..!

இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக் கிழமை வருவதால், மாணவர்களும் வேலைக்குச் செல்பவர்களும் ஒரு நாள் லீவு போச்சே என்றும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் ஆரவாரமாக பட்டாசுகள் வாங்குவதும், புத்தாடை வாங்குவதுமாக மக்கள் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக் கிழமை வருவதால், மாணவர்களும் வேலைக்குச் செல்பவர்களும் ஒரு நாள் லீவு போச்சே என்றும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். 

Diwali

இந்நிலையில், கடந்த ஆண்டு தீபாவளிக்கு 5 நாட்கள் அரசு விடுமுறை அளித்ததை போல இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு, வீட்டை விட்டு வெளியில் தங்கியிருப்போர் ஊருக்குச் சென்று தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட வரும் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் சிவகாசியில் தமிழ் நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளித்துள்ளனர். 

Minister Rajendra balaji

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விடுமுறை அளிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசிப்பதாகத் தெரிவித்துள்ளார்.