தீபாவளிக்கு ரூ.385 கோடி வசூலுக்கு எடப்பாடி அரசு திட்டம்! வெளங்கிடும் தமிழ்நாடு!

 

தீபாவளிக்கு ரூ.385 கோடி வசூலுக்கு எடப்பாடி அரசு திட்டம்!  வெளங்கிடும் தமிழ்நாடு!

இந்தியா ஒளிர்கிறது என்பதைப் போல இனி தமிழகம் தலைநிமிர்கிறது என்று தேர்தல் நேர வாக்குறுதிகளில் ஆட்சியின் சாதனையாக இதையும் சேர்த்துச் சொல்வார்கள் போல…

தமிழகம் பொருளாதாரத்தில் தள்ளாடுகிறது என்று யார் சொன்னாலும் இனி நம்பவே கூடாது. இந்தியா ஒளிர்கிறது என்பதைப் போல இனி தமிழகம் தலைநிமிர்கிறது என்று தேர்தல் நேர வாக்குறுதிகளில் ஆட்சியின் சாதனையாக இதையும் சேர்த்துச் சொல்வார்கள் போல…

Tasmac

மாநிலத்தில் கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கிறது. எந்தவொரு மக்களுக்கு பயனளிக்கும் காரியத்திற்கும் இப்படி எல்லாம் திட்டம் போட்டு செயல்படுத்த மாட்டார்கள் போல. ஆனால், சரக்கு விஷயத்தில் மட்டும் அரசு தீவிரமாய் இயங்கி வருகிறது. பண்டிகை காலங்கள் எல்லாம் இன்னும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். நாடு முழுவதும் தீபாவளி ஷாப்பிங் களை கட்டியுள்ள நிலையில், இதை கல்லா கட்டிக் கொள்வதற்கான காலமாக பார்க்கிறது எடப்பாடி அரசு. தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு தேவையான சரக்குகளை முன்கூட்டியே இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tasmac

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ந்தேதி செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகை வந்தது. இதனால் அதற்கு முந்தைய 3 நாட்களும் கொண்டாட்ட நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த நாட்களில் யாரும் எதிர்பாராத வகையில் ரூ.602 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்தது. அதாவது கூடுதலாக 34 சதவீதம் மது விற்பனையாகி இருந்தது.

TN Govt.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை(27-ந்தேதி) வருகிறது. அரசு வார விடுமுறை நாளிலேயே இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருவதால் கொண்டாட்ட நாட்களின் எண்ணிக்கையும் குறைகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களே கொண்டாட்ட நாட்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களில் மட்டும் ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

25-ந்தேதி ரூ.80 கோடிக்கும், 26-ந்தேதி ரூ.130 கோடிக்கும், தீபாவளி நாளான 27-ந்தேதி ரூ.175 கோடிக்கும் மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மதுக்கடைகளுக்கும், 15 நாட்களுக்கு தேவையான மது வகைகளை முன்கூட்டியே இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், சரியான நேரத்தில் கடைகளை திறந்து குறிப்பிட்ட நேரத்தில் மூடவேண்டும் என்றும் எக்காரணத்தை கொண்டு கடைகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.