தீபாவளிக்கு கண்டிப்பா பட்டாசு வெடிக்கணுமா? சாஸ்திரங்கள் என்ன சொல்லுது?

 

தீபாவளிக்கு கண்டிப்பா பட்டாசு வெடிக்கணுமா? சாஸ்திரங்கள் என்ன சொல்லுது?

ஒரு கம்பி மத்தாப்பாவது கொளுத்திப் போடுங்க! தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலைன்னா எப்படி? என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். மாசு அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக பட்டாசு வெடிப்பதற்கு ராகுகாலம், எம கண்டம் எல்லாம் இல்லாத நல்ல நேரமாக குறித்து கொடுத்து அதிர்ச்சியைத் தருகிறது அரசாங்கம். நம்ம சாஸ்திரங்கள் என்ன சொல்லுது? தீபாவளிக்கு பட்டாசு கண்டிப்பா வெடிக்கணுமா… இல்லை இதுமாதிரியான விஷயங்களை எல்லாம் பொழுது போக்க நாமளே உருவாக்கி வெச்சதா?

ஒரு கம்பி மத்தாப்பாவது கொளுத்திப் போடுங்க! தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலைன்னா எப்படி? என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். மாசு அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக பட்டாசு வெடிப்பதற்கு ராகுகாலம், எம கண்டம் எல்லாம் இல்லாத நல்ல நேரமாக குறித்து கொடுத்து அதிர்ச்சியைத் தருகிறது அரசாங்கம். நம்ம சாஸ்திரங்கள் என்ன சொல்லுது? தீபாவளிக்கு பட்டாசு கண்டிப்பா வெடிக்கணுமா… இல்லை இதுமாதிரியான விஷயங்களை எல்லாம் பொழுது போக்க நாமளே உருவாக்கி வெச்சதா?

diwali

தீபாவளிக்கு ஏன் பட்டாசு வெடிக்க வேண்டும்  என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. மற்ற வெடிகளை தீபாவளியன்று வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் சொல்லாமல் இருந்தாலும், கண்டிப்பாக தீபாவளியன்று மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது.
“ஸ்மிருதி கௌஸ்” என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது. 
“துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ:
உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்”
என்ற இந்த ஸ்லோகத்தில் “துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, “உல்கா’ எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது சாஸ்திரம்.
அதாவது, மத்தாப்பு கொளுத்த வேண்டும். இதில் வரும் “பூத’ என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும். அதாவது, நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி. ‘தர்சம்’ என்ற வார்த்தை “அமாவாசை’யைக் குறிக்கும். ஐப்பசி மாத அமாவாசை. இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம். எதனால் இந்த இரண்டு நாட்களிலும் கையில் நெருப்பைப் பிடிக்கச் சொல்கிறார்கள்?

diwali

“பித்ரூணாம்” என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது. பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் (சொர்க்கம் நோக்கி) முன்னேறிச் செல்வார்கள். இந்த வருடத்தில் இருந்து, பட்டாசை விரும்பாதவர்கள் கூட, கண்டிப்பாக மத்தாப்பாவது வாங்கி விடுங்கள், நம் முன்னோருக்காக “ப்ரதோஷ-காலத்தில்  “உல்கா தானம்” செய்வோம்.
உல்கா – நெருப்புடன் கூடிய கட்டை… இதைத் தானே தற்காலத்தில் மத்தாப்பு என்கிறோம்.
மேலும் மூன்று நாட்களிலும் தீபங்களாலும், வாண வேடிக்கைகளாலும் பல தீபங்களை ஏற்றி லட்சுமி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்தால் ஐஸ்வர்யத்தைப் பெற்று வாழலாம் என்பதை, ‘நீராஜிதோமஹாலக்ஷ்மீ மர்ச்சயன்ச்ரியமச்னுதே தீபைர் நீராஜிதா யத்ர தீபாவளிரிதிஸ்ம்ருதா’ என்ற வரிகள் தெளிவாக்குகின்றன.