தி.மு.க.,- எம்.பி.,யுடன் கூட்டு சேர்ந்த ஓ.பி.ரவீந்திர நாத்… அப்பாவை மிஞ்சி அதிரடி அரசியல்..!!

 

தி.மு.க.,- எம்.பி.,யுடன் கூட்டு சேர்ந்த ஓ.பி.ரவீந்திர நாத்… அப்பாவை மிஞ்சி அதிரடி அரசியல்..!!

மொத்தத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் அப்பாவை விட பரபரப்பான அரசியல்வாதியாகி வருகிறார். இந்த பப்ளிசிட்டி தானே பாஸ் அரசியலுக்கு அவசியம்.

தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மகனும் தேனி எம்.பி.,யுமான ரவீந்திரநாத் குமாரை நாடாளுமன்றத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.,யான டி.ஆர்.பாலு, ‘முதுகெலும்பு இல்லாதவர்’ என அவமானப்படுத்தினார்.

ஆனால், ரவீந்திரநாத் அதை பற்றி கவலைப்படாமல் தி.மு.க.வினருடன் ரொம்பவே  ஒட்டி உறவாடுகிறார். சில வாரங்களுக்கு முன் தேனிக்கு வந்த தி.மு.க., பொருளாளர் துரைமுருகனோடு கொஞ்சி குலாவினார். இப்போது திருச்சியில் ரயில்வே அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த ரவீந்திரநாத் தி.மு.க – எம்.பி., சிவாவிடம் நட்பு பாராட்டி இருக்கிறார்.

துணை முதல்வரோட மகனே இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும் என அப்பாவி தொண்டர்கள், கேள்வி கேட்கிறார்கள். அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் பலர் வதந்தி பரப்பினார்கள். அடுத்து காவித் துண்டு அணிந்து நான் இந்து அடுத்து தான் எல்லாமே என அவர் பேசியதும் பரபரப்பை கிளப்பினார்கள். இப்போது திமுக எம்.பிகளுடன் உறவாடுவதை ஊதி பெரிதாக்குகிறார்கள். 

ஆக மொத்தத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் அப்பாவை விட பரபரப்பான அரசியல்வாதியாகி வருகிறார். இந்த பப்ளிசிட்டி தானே பாஸ் அரசியலுக்கு அவசியம்.