தி.நகரில் கடைகளை மூட உத்தரவு! வெறிச்சோடி கிடக்கும் சென்னை…

 

தி.நகரில் கடைகளை மூட உத்தரவு! வெறிச்சோடி கிடக்கும் சென்னை…

கொரோனா எதிரொலியாக சென்னை தி.நகரில் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா எதிரொலியாக சென்னை தி.நகரில் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைராஸால் இந்தியாவில் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

tnagar

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பொது இடங்களில் கூடக்கூடாது, திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை மார்ச் 31 ஆம் தேதிவரை மூடவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் சென்னையில் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில் சென்னை தி.நகரில் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அவசிய தேவை தவிர்த்து மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள பூங்காக்கள் மூடப்படவுள்ளது.