திஹாருக்குள் விஜய் பட டயலாக் பேசும் ப.சிதம்பரம்… 75வது பிறந்த நாளில் அமித் ஷா கொடுத்த பரிசு..!

 

திஹாருக்குள் விஜய் பட டயலாக் பேசும் ப.சிதம்பரம்… 75வது பிறந்த நாளில் அமித் ஷா கொடுத்த பரிசு..!

16 ஆம் தேதி ப.சிதம்பரத்தின் 75 ஆவதுபிறந்தநாள். இதை ஏக தடபுடலாகக் கொண்டாட திட்டம் போட்டிருந்தார் மகன் கார்த்தி சிதம்பரம்.

எதிர்பார்த்தபடியே முன்னாள் மத்திய அமைச்சர் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார்.

தன்னை ப.சிதம்பரம் சிறையில் அடைத்ததற்கு 10 ஆண்டுகள் கழித்து பழிக்குப் பழி வாங்கிவிட்டார் அமித்ஷா என்கிற விமர்சனங்களும் இன்னொரு பக்கத்தில் முன்வைக்கப்படுகின்றன. தற்போது  மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்தபோது 2010 ஆண்டில் சொரபுதீன்போலி என்கவுன்ட்டர் வழக்கில் அவர்  கைது செய்யப்பட்டார்.amit shah

அப்போது சிபிஐ சிதம்பரத்தின் கண் அசைவில் இயங்கியது. வழக்கு, விசாரணை என அலைக்கழிக்கப்பட்ட அமித்ஷா, குஜராத்திற்குள் நுழையக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிடும் அளவிற்கு சிபிஐ இந்த விவகாரத்தை சீரியசாகக் கையாண்டது.

பதிலுக்கு பதில் என்ற வகையில் அமித்ஷாவின் உத்தரவின் பேரில்  சிபிஐ மூலம் இப்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என காங்கிரசார் குற்றம்சாட்டுகின்றனர். வரும்  16 ஆம் தேதி ப.சிதம்பரத்தின் 75 ஆவதுபிறந்தநாள். இதை ஏக தடபுடலாகக் கொண்டாட திட்டம் போட்டிருந்தார் மகன் கார்த்தி சிதம்பரம்.chidambaram

ஆனால்  சிபிஐ  நீதிமன்றம்செப்டம்பர் 19 ஆம் தேதி வரை சிதம்பரத்தை திகார் சிறையில்அடைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக  சிதம்பரத்தின் 75ஆவது பிறந்தநாளை சிறையிலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், குடும்பத்தினர் மிகுந்த பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர். எனினும், பிறந்தநாளுக்கு முன்பாக சிதம்பரத்தை எப்படியாவது ஜாமீனில் எடுக்க அவரது  வழக்கறிஞர்கள் மீண்டும் சட்டப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.