தில்லியில் ரயில், விமான சேவை பாதிப்பு
Jan 18, 2019, 11:18 IST1547790505000
பனிமூட்டம் காரணமாக தில்லியில் ரயில் மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
புதுதில்லி: பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரயில் மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை கடுமையாக பனி பொழிந்தது. அருகில் இருப்பவர்கள் கூட கண்ணுக்கு புலப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். இதன் காரணமாக காலை 5.30 மணியில் இருந்து 7 மணி வரை தில்லி விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல், 10க்கும் மேற்பட்ட ரயில்களும் தாமதம் ஆகியுள்ளன.
மேற்கு உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் இரண்டு தினங்களுக்கு மிக கடுமையான பனிமூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.