தில்லியில் ரயில்கள் தாமதம்… பயணிகள் கடும் அவதி

 

தில்லியில் ரயில்கள் தாமதம்… பயணிகள் கடும் அவதி

தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் 21 ரயில்கள் தாமதமாகியுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

புதுதில்லி: தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் 21 ரயில்கள் தாமதமாகியுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தலைநகர் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. அருகில் இருப்பவர்கள் கூட கண்ணுக்கு புலப்படாத அளவு பனி பொழிவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் இருக்கிறது. 

இந்நிலையில், கடுமையான பனி பொழிவு காரணமாக தில்லி ரெயில் நிலையத்திற்குள் ரெயில்கள் நுழைய முடியாமலும், ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்கள் புறப்பட முடியாமலும் திணறின இதனால் 21 ரயில்கள் தாமதமாகியுள்ளதால்பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இதேபோல் கடந்த 21-ம் தேதி ஏற்பட்ட பனி பொழிவு காரணமாக 11 ரயில்கள் தாமதமாகின என்பது குறிப்பிடத்தக்கது.