தில்லியில் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்: 22 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரவு!

 

தில்லியில் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்: 22 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரவு!

அரசியலமைப்பு சட்டம் மற்றும்  கூட்டாட்சியை  பாதுகாக்கத்  தில்லியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று முதல் இரண்டு நாட்களுக்குத் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.

புதுதில்லி: அரசியலமைப்பு சட்டம் மற்றும்  கூட்டாட்சியை  பாதுகாக்கத்  தில்லியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று முதல் இரண்டு நாட்களுக்குத் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ரோஸ்வேலி மற்றும் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில்  கடந்த 4 ஆம் தேதி கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சிபிஐ அதிகாரிகளின் செயலை கண்டித்தும், ஆட்சியைக் கலைக்க மத்திய அரசு முயல்வதாகக் கூறியும்  முதல்வர்  மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மூன்று நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து தனது தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி திரும்ப பெற்றார்.

mamata

இந்நிலையில்  அரசியலமைப்பு சட்டம் மற்றும்  கூட்டாட்சியை  பாதுகாக்க மம்தா பானர்ஜி ஜனநாயக பாதுகாப்பு பேரணி என்ற பெயரில் தில்லியில் இன்று முதல் 2நாட்களுக்குத்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளார். இன்று  மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட 22 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

chandrababu

முன்னதாக ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.