திறந்த 2 மணி நேரத்தில் மூடப்பட்ட புதிய டாஸ்மாக் கடை! காரணம் தெரியுமா? 

 

திறந்த 2 மணி நேரத்தில் மூடப்பட்ட புதிய டாஸ்மாக் கடை! காரணம் தெரியுமா? 

திருச்சி அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை திறந்த 2 மணி நேரத்திலேயே பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை திறந்த 2 மணி நேரத்திலேயே பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் குடி பிரச்சனை ஒரு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. ஆங்காங்கே மதுக் கடைகளை மூட கோரியும், வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுவால் சீரழிந்த குடும்பங்கள் பல. மதுக் கடைகளின் மூலம் வருமானம் அதிகமாக வருவதாலோ என்னமோ தமிழக அரசு மதுக் கடைகளை மூடும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் உள்ளது. 

tasmac

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சின்னாக்கவுண்டம்பட்டியில் பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே இன்று காலை புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. மதுக்கடையை முற்றுகையிட பேரணியாக வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மருங்காபுரி வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  பின்பு கடை  திறக்கப்பட்டது. ஆனால் மக்களின் தொடர் பேரணியையடுத்து 2 மணி நேரத்தில் மதுக்கடை மூடப்பட்டது.