திறக்கப்பட்ட 2 நாட்களில் மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகள்

 

திறக்கப்பட்ட 2 நாட்களில் மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகள்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள மூன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள மூன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 

தமிழக-கேரள எல்லையில் செயல்பட்ட நம்பியார்குன்னு டாஸ்மாக் கடைக்கு வயநாட்டைச் சேர்ந்த ஒருவர் மதுவாங்கிச் சென்றுள்ளார். இவர், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரோடு தொடர்பில் இருந்தவர் என கண்டறியப்பட்டவுடன், நம்பியார்குன்னு டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அக்கடையில் பணியாற்றிய ஊழியர்கள், மற்ற இரண்டு கடைகளுக்கு பணி நிமித்தமாக சென்று வந்ததால், அந்த இரண்டு கடைகளும் அடைக்கப்பட்டன. 

tasmac

மூன்று கடைகளிலும் பணியாற்றிய ஊழியர்கள், மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்ட காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொது முடக்க உத்தரவை மீறி கேரளாவில் இருந்து முறைகேடாக தமிழகத்திற்குள் நுழைந்து மது வாங்கிச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.