திரௌபதி இயக்குநர் மீது பிரபல தொகுப்பாளர் போலீசில் புகார்!

 

திரௌபதி இயக்குநர்  மீது பிரபல தொகுப்பாளர் போலீசில் புகார்!

கேள்வி எழுப்பி தன்னை ஒரு அமைப்பின் பிரதிநிதியாகச் சித்தரிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினார்.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  “திரௌபதி”. இப்படத்தில் நடிகை ஷாலினியின்  சகோதரர்  ரிச்சர்ட் ரிஷி , சுசீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ள இந்த படத்தில்  நடிகர் கருணாஸ், ஜீவா ரவி,  பாரதி உட்பட பலர்  நடித்துள்ளனர். இந்த படம் நாடக காதல் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் சமீபத்தில் வெளியாகி ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. 

 

இந்நிலையில் இயக்குநர்  மோகன் ஜி மீது கலாட்டா  டாட்காம் என்கிற இணையதள ஊடகத்தின் தொகுப்பாளர் விக்ரமன் என்பவர்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் இயக்குநர்  மோகன் ஆதரவாளர்கள் தனக்கும் தனது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இணையத்தில் தன் சாதி குறித்து கேள்வி எழுப்பி தன்னை ஒரு அமைப்பின் பிரதிநிதியாகச் சித்தரிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினார்.

ttn

இதனிடையே பிப்ரவரி 5-ம் தேதி கலாட்டா டாட்காம் இணைய ஊடகத்தின் நேர்காணலில் கலந்துகொண்ட இயக்குநர் மோகன் ஜி,  பாதியிலேயே எழுந்து செல்வது போன்று ஒளிபரப்பப்பட்டது. இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மோகன், இதனைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் அவரது டிவிட்டர் பக்கத்தில்,’நேர்காணலை முடித்து சென்ற வீடியோவை ஒளிபரப்பாமல் பாதியிலேயே எழுந்து செல்வது மட்டும் ஒளிபரப்பப்பட்டது  ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து மோகனின் ஆதரவாளர்கள்  தொகுப்பாளர் விக்ரமனுக்கு கொலை ம் மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது.