திரௌபதியாக வலம் வரவுள்ள நடிகை தீபிகா படுகோன்

 

திரௌபதியாக வலம் வரவுள்ள நடிகை தீபிகா படுகோன்

லக்‌ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் சபாக் படத்தை  தயாரித்து நடித்து வருகிறார்

நடிகை தீபிகா படுகோன் திரௌபதியாக நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

பாலிவுட்டில் முன்னணி  நடிகையாக வலம்வருபவர் நடிகை தீபிகா படுகோன். பெண்களை மையப்படுத்தி வரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் சமீபத்தில் ஆசிட் வீச்சால் பாதிப்புக்குள்ளான லக்‌ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் சபாக் படத்தை  தயாரித்து நடித்து வருகிறார். 

deepika

இந்நிலையில் தீபிகா படுகோன் தனது இரண்டாவது தயாரிப்பாக மகாபாரதம்  புராணக்கதையை தயாரித்து நடிக்கவுள்ளார். இதில் தீபிகா படுகோன் திரௌபதியாக நடிக்கிறார்.  இதுகுறித்து கூறியுள்ள தீபிகா, ‘திரெளபதி கதாபாத்திரத்தில் நடிப்பதை பெருமையாக கொள்கிறேன்.  இது என் வாழ்வின் முக்கிய கதாபாத்திரம் ஆகும். மகாபாரதத்தில் நம் வாழ்க்கைக்கு தேவையான பாடங்கள் உள்ளன. இந்த புராண  கதையை பல பாகங்களாக தயாரிக்கவுள்ளோம். இதன் முதல் பாகம் வரும் 2021 ஆம் ஆண்டு வெளியாகும்’ என்றார். இப்படம் குறித்த மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.