திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு! விரைவில் இடைத்தேர்தல்!!

 

திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு! விரைவில் இடைத்தேர்தல்!!

திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவித்து சட்டபேரவை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 

திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவித்து சட்டபேரவை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 

திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காத்தவராயன் ஆகியோர் அண்மையில்  உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, அந்த இரு தொகுதிகளும் காலியானதாக அறிவித்துள்ள சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், அது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக எம்.எல்.ஏக்கள்

அடுத்த ஆண்டு மே 25 ஆம் தேதியுடன் இந்த ஆட்சி முடிகிறது என்பதால் 6 மாத காலத்திற்குள் இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளதாகவும், விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.